கோவை ஜூன் 17 கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அறிவிப்பின்படி தினக்கூலியாக ரூ. 770 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 9-ம் தேதி. போராட்டத்தை தொடங்கினர் .இந்த போராட்டம் நேற்று 8-வது நாளாக தொடர்ந்து நீடித்தது. இதற்கிடையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் தூய்மை பணியாளர்களுக்கான சம்பளம்நிர்ணயிக்கப்பட்டது. இதனை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டனர். ஆனால் சில தூய்மை பணியாளர்கள்ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பும் கலெக்டர் அலுவலகம் முன்பும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழு உறுப்பினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் நேற்று போராட்டம் நடத்துவதற்காக தெற்கு தாலுகா அலுவலக முன்பும் கலெக்டர் முன்பும் வந்தனர் .அவர்களை அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட வந்ததாக 87 பெண்கள் உட்பட 175 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் 175 தூய்மை பணியாளர்கள் கைது. 8-வது நாளாக போராட்டம் .
