சுங்குவார்சத்திரம் அருகே ரூ.11லட்சம் மதிப்புள்ள 1டன் போதை பொருட்கள் பறிமுதல்..!

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே ரூ.11லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசாரின் வாகன சோதனையில் பெங்களூருவில் இருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 1டன் எடையுள்ள போதை பொருட்கள் சிக்கியது. போதை பொருட்களை கடத்தி வந்த ஓட்டுநர் மகேஷ் குமாரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.