கோவை ஜூன் 22 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மகன் விக்னேஷ் ( வயது 22) இவர் மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிடம் நட்பு வைத்திருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் நேற்று முன்தினம் நிவேதாவிடம்பேசிக் கொண்டிருந்தார் அதை நிவேதாவின் தம்பி ஸ்ரீஹரி பார்த்து விட்டார்,இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீஹரி அவரது நண்பர்களை வரவழைத்து விக்னேசை தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தினார்கள் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து விக்னேஷ் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காரமடை சதீஷ்குமார் ( வயது 27) சாய் ஹரி ( வயது 18) ஆதித்யா ( வயது 18) ஆகியோரை கைது செய்தனர் ,மேலும் விசாரணை நடந்து வருகிறது.
காதல் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து .3 பேர் கைது .
