கோவை, மே 29- தாயிடம் தகராறில் ஈடுபட்டதால் இளம்பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்வர் நாகலட்சுமி (25). இவர் அதே பகுதியில் உள்ள பேப்பர் மில்லில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் கண்ணப்ப நகரை சேர்ந்த நாகூர் அம்மா என்பவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மில்லின் உரிமையாளர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் காலை நாகலட்சுமி வழக்கம் போல மில்லிற்கு வேலைக்கு வந்தார். அப்போது மில்லின் முன்பு நின்றிருந்த நாகூர் அம்மா மற்றும் அவரது மகன் முகமது ராஜா (22) ஆகியோர் மீண்டும் நாகலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த முகமது ராஜா தகாத வார்த்தைகளால் திட்டி நாகலட்சுமியை தாக்கி, கீழே தள்ளி விட்டார். இதுகுறித்து நாகலட்சுமி கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ராஜாவை கைது செய்தனர்
தாயிடம் தகராறில் ஈடுபட்டதால் இளம்பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
