ஓரினசேர்க்கைக்கு சம்மதிக்காத தொழிலாளி கல்லால் தாக்கி படுகொலை. வட மாநில வாலிபர் கைது .

கோவை ஜூன் 11 கோவை ,அரசூர் அருகே உள்ள பாக்கு தோட்டத்தில் டாஸ்மாக் கடை உள்ளது .இதன் அருகே ஒருவர் அரை நிர்வாணத்தில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார் .இதில் இறந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபான் அன்சாரி ( வயது 50 )என்பதும் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்ததும் .அவரது தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயங்களும் ,ஆசன வாயு பகுதியில் மரக்கட்டையும் சொருகப்பட்டிருந்தது. இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அப்போது கொலையில் துப்பு துவங்கியது.கொலை யாளிஅரசூரில் ஊரில் உள்ள தனியார் பவுண்டரியில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முக்தர் (வயது 31) என்பது தெரிய வந்தது . உடனே போலீசார் அவரை கைது செய்தனர் அவரிடம் விசாரித்த போது பரபரப்பான தகவல் வெளியானது கைதான முக்தருக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்துள்ளது. இதனால் அன்சாரியை தனது இச்சைக்கு சம்மதிக்கு மாறு கேட்டுள்ளார். ஆனால் சுபான் அன்சாரி இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முக்தர் தரையில் கிடந்த கல்லை எடுத்து சுபான் அன்சாரியின் தலையில் தாக்கிகொலை செய்ததாகவும்,பின்னர் வெறியில் ஆசான வாயிலில் மரக்கட்டையை சொருகியதாகவும், உடலை நிர்வாண நிலையில் போட்டுச் சென்றதாகவும் போலீசாரிடம் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைதான முக்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது: