கோவை மே 30 அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அமினூல் ஹாக் (வயது 27) இவர் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் உள்ள பாக்கு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .அங்குள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். பலத்த மழையின் காரணமாக அவர் தங்கியிருந்த வீட்டின் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டது. இதற்காக மேற்கூரையின் மேல் தார்ப்பாயை போடுவதற்காக ஏறினார். அப்போது அங்கே சென்று சென்று கொண்டிருந்தமின் வயரில் இவரது கை பட்டது . இதனால் தூக்கி வீசப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து அவரது மனைவி தஸ்லீமாஆனைமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பலத்தமழைக்கு மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி உயிரிழப்பு.
