கோவை மே 13 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள ஒடைய குளத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 52) இவர் சங்கம்பாளையம் மகாலட்சுமிஎன்பவரது வீட்டில் பம்பு செட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இவரை பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். .வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மனைவி உமாமகேஸ்வரி கோட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழப்பு.
