பைக் விபத்தில்பெண் – வாலிபர் உயிரிழப்பு.

கோவை ஜூன் 10 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, கணபதி நகரை சேர்ந்தவர்பிலிப். இவரது மனைவி சகாய தேவதாள் நோசல் ( வயது 63) இவர் நேற்று கோவை – அவினாசி ரோட்டில் மொபட் ஓட்டிச் சென்றார் .அங்குள்ள மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த மற்றொரு பைக் இவரது மொபட் மீது மோதியது இதில் சகாய தேவதாள் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்துகணவர் ரோசாரி கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார் போலீசார் பைக் ஓட்டி வந்த தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் இதே போல வால்பாறை உருளிகல், 2-வதுபிரிவை சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 24)கூலித்தொழிலாளி. இவர் நேற்று சூலூர் அப்பநாயக்கன்பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அங்குள்ள பள்ளிக்கூடம் அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்தார்,தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து அவரது தந்தை ஜெயக்குமார் சூலூர் போலீசில்புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.