கோவை ஜூன் 12 ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை, சாலை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணதாசன். (வயது 33) இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 25) இவர்கள் பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள தியாகி குமரன் வீதியில் வசித்து வந்தனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் கண்ணதாசன் மனைவியுடன் கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில்ராஜேஸ்வரி நேற்று முன் தினம் செல்போனில் கணவருக்கு அழைப்பு விடுத்தார். மறுமுனையில் அவர் எடுத்து பேசாததால் மனம் உடைந்த ராஜேஸ்வரி அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து கணவர் கண்ணதாசன்பீளமேடு போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் திருவாசகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கணவர் செல்போனில் பேசாத தால் மனைவி தூக்கு போட்டு தற்கொலை .
