அப்போது, திருச்சி மாவட்டத்தில் மற்ற தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தவெக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். கொளத்தூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் 30 ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு பதிவு காண விளக்கத்தை அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பொறுப்பு டிஜிபிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியினருக்கு ஒரே மாதிரியான கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதியை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில், திருச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கு மாநகர காவல் துறை அனுமதி வழங்கி உள்ளது. கரூரில் ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவரது கூட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதுடன் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.





