வைகாசி விசாகம். மருதமலை மலைப்பாதையில் 9-ந் தேதி வாகனங்கள்செல்ல தடை.

கோவைஜூன் 7 கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது .இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்காக தினமும் வருகிறார்கள். இந்த நிலையில் வருகிற 9- – ந் தேதி வைகாசி விசாகம் நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் அதிக அளவில் மருதமலைக்கு வந்து முருகனை தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு மற்றும் நெரிசலை தவிர்க்க வருகிற 9 – ந் தேதி தேதிமருதமலை மலைப்பாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில்பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது எனவே பக்தர்கள் மலைபடிகள் வழியாகவும்,கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்களிலும் சென்று சுவாமியை தரிசிக்கலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.