கோவை ஜூன் 25 கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளவேந்திரன் நேற்று அங்குள்ள நாதமேடு, கருப்பராயன் கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த புலு சுனா ( வயது 31)என்பது தெரிய வந்தது. இவர் சூலூர், பாரதி புரத்தில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் தங்கி இருந்து வேலை செய்து வந்தார்.இந்த கஞ்சாவை வட மாநிலத்தில் இருந்து ரயிலில் கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதேபோல பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார்,அங்குள்ள புட்டு விக்கி ரோட்டில்உள்ள பஸ் ஸ்டாப் அருகேநின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தில் சோதனை செய்தார்.அவரிடம் 5.05கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும், கஞ்சா விற்ற பணம் ரூ 64 ஆயிரத்து 270 , ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது..இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஒடிசாவைச் சேர்ந்த சிரஞ்சீப் ஜனா (வயது 28) என்பது தெரியவந்தது.இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
10 கிலோ கஞ்சாவுடன் வட மாநில தொழிலாளி 2 பேர் கைது.
