கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சபரி (வயது 15), தகப்பனார் பெயர் பாண்டியன் மற்றும் 8 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சுபாஷ் (வயது 14), தகப்பனார் பெயர் சிவராஜ் ஆகிய இருவரும் சேத்துமடை பகுதியில் உள்ள நாகர் ஊத்மலை கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள் வால்பாறை எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள உண்டு உறைவிட விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதியன்று காலையில் வெளியே சென்றவர்கள் அன்று மாலைவரை விடுதி திரும்பாததால் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தகுமாரிடம் புகார் அளித்துள்ளனர்.புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் மூன்று தனிப்படை அமைத்து பள்ளி மாணவர்களை தேடும் பணியை தீவிர படுத்திவரும் நிலையில் மாணவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் தாமதமின்றி வால்பாறை காவல் நிலையத்தில் தெரிவிக்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது