கோவை ஜூன் 26 கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 51) இவர் கடந்த 8 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மனைவி பிரீத்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதே போல விளாங்குறிச்சி, இந்து நகர், 3 -வது வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் கணேஷ் வெற்றிவேல் ( வயது 24 )குடிப்பழக்கம் உடையவர் .இதை பெற்றோர்கள் கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த கணேஷ் வெற்றிவேல் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாயார் பஞ்சவர்ணம் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஒரே நாளில் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை .
