சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி கோவை ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.

கோவை ஜூன் 2 கோவை ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி ( வயது 30) மதன்குமார் (வயது 38) தினேஷ் ( வயது 25) மாணிக்கம் (வயது 28) மோகன் ( வயது 28) நண்பர்களான இவர்கள் 5 பேரும் ஆட்டோ டிரைவர்கள் . நேற்று அதிகாலை 5 பேரும் ஒரு காரில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட காரமடை வழியாக சென்றனர். காரமடை மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போதுகார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது .இந்த விபத்தில் காரில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, மதன்குமார் ஆகிய 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இது குறித்து தகவல் இருந்தும் காரமடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த தினேஷ் , மாணிக்கம், மோகன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான 2பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த விபத்து குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..