மூன்று வழிப்பறி கொள்ளையர்கள் குண்டர் சட்டத்தில் கைது.

கோவை ஜூன் 25 கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது .இது குறித்து போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் கனகசபாபதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்டது திருப்பூரை சேர்ந்த அரவிந்த், யுவராஜ் ,பாலமுருகன் என்பது தெரியவந்தது .உடனே அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இடமிருந்து 8 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சுந்தரபுரம் போலீசார் பரிந்துரையின் பேரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் வழிப்பறியில் ஈடுபட்ட அவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள 3 பேருக்கும் நேற்று வழங்கப்பட்டது.