போக்சோ வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் மகன் கவியரசன் (வயது 21) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்.பவன்குமார் க.கிரியப்பனவர் மேற்கண்ட நபர் பாலியல் குற்றவாளி என கருதி கவியரசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின்படி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளியான கவியரசன் சிறையில் இருந்த போது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது..