கோவை சாய்பாபா காலனி டோபிகானா பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் என்ற ஜாவுதீன் ( வயது 20) இவர் கத்தியை காட்டி மிரட்டி ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றதாக சாய்பாபா காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். செல்வபுரம் செட்டி வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 28) இவர் கஞ்சா விற்றதாக செல்வபுரம் போலீசாரால்கைது செய்யப்பட்டார். அதுபோன்று மது குடிக்க பணம் கொடுக்காததால் 50 வயதான ஒருவரை கொலை செய்ததாக பேரூரை சேர்ந்த விஜய் ( வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தருக்கு போலீசார் பரிந்துரை செய்தனர். அதன் பேரில் ஜெயப்பிரகாஷ், சரவணன், விஜய் ஆகிய 3 பேரையும்குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர்சரவணா சுந்தர் உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.. அதற்கான நகல்கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது..
கொலை, கொள்ளை வழக்கில் கைதான 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!
