வேன் மோதி 6 வயது மாணவன் பரிதாப சாவு…

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செல்லப்பம்பாளையம், சாமுண்டிபுரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் சித்தார்த் ( வயது 6) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் யு.கே.ஜி. படித்து வந்தான். நேற்று புஞ்சை புளியம்பட்டி= அன்னூர் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் அருகே நடந்து சென்றான். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் சிறுவன் மீது மோதியது ..இதில் படுகாயம் அடைந்தான். சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் பரிதாபமாக இறந்தான்.இது குறித்து அவனது தந்தை மகேந்திரன் அன்னூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக அந்தியூர் அம்பேத்கர் நரைச் சேர்ந்த வேன் டிரைவர் ராமன் என்ற பிரவீன் (வயது 21) கைது செய்யப்பட்டார்.