தமிழகத்தில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று போலீசார் அழுத்தம் கொடுக்கின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம், இது குறித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி தெரியப்படுத்த ஐ கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது





