புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைகளை தீர்க்க நடமாடும் அரசு அலுவலகம் ரேபரேலி மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது. உ.பி.யின் ரேபரேலி மாவட்டத்தில் சுமார் 15,000 பதிவு செய்யப்பட்ட மற்றும் நூற்றுக்கணக்கான பதிவு செய்யப்படாத மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்கள் மாற்றுத்திறனாளி சான்றிதழ், கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான இடஒதுக்கீடு, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல ...




