பலத்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது .இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து அங்கு திரண்டு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்..இதுகுறித்து போளுவாம்பட்டி வனத்துறை வனச்சரகர் ஜெயச்சந்திரன் கூறியதாவது:-பலத்த மழையின் காரணமாக அருவியில் நேற்று காலையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது..இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்குகுளிக்க அனுமதி அளிக்கவில்லை. இன்று அருவியில் தண்ணீர் வரத்து எப்படி உள்ளது? என்பதை அறிந்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
திடீர் வெள்ளப்பெருக்கு… கோவை குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை.!!
