நீலகிரி மாவட்டம் உதகையில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளமான நீலகிரி மாவட்டம் உதகையில் ரோஜா பூங்கா உள்ளது, இந்த ரோஸ்கார்டன் 18 வது வார்டுக்கு உட்பட்டதாகும், இங்கு சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்த பூங்காவாக உள்ளது,இங்கு பூங்காவின் உள்ளே உள்ள கழிப்பிடத்தின் கழிவுநீர் குழாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் சிதிலமடைந்துள்ளதால் பூங்காவிற்கு வருகின்ற சுற்றுலாப்பயணிகள் அதனை பயன்படுத்த இயலாத நிலைமட்டுமல்லாமல் அந்த கழிவுநீர் அங்குள்ள மிகப்பெரிய கிணற்றில் கலப்பதும் அங்கு சாட்லைன் பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்புடுவதாகவும் அப்பகுதி மக்களும் ரோஸ்கார்டன் பூங்கா மேலாளர் பிரியா அவர்களும் சொன்னதற்கு இணங்க, பகுதி நகர மன்ற உறுப்பினர் கே.ஏ முஸ்தபா பூங்கா மேலாளர் மற்றும் பூங்கா அலுவலர்களும் உதகை நகராட்சி மேஸ்திரி நிர்மல் காந்த் மற்றும் பணியாளர்களும் AB.சித்திக்கும் பூங்காவுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்,ரோஸ்கார்டன் நிர்வாகம் சார்பாக புதிதாக பெரிய 8 இன்ச் கழிவுநீர் செல்லும் குழாய்களை அமைப்பது, சிதிலமடைந்துள்ள கழிவுநீர் தொட்டிகளை சீரமைப்பது என நடவடிக்கை எடுப்பதாக மேலாளர் ப்ரியா அவர்கள் தெரிவித்தார்,
மேலும் 18 வது வார்டு சாட்லைன் பகுதியில் வாழும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் பணியினை செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ரோஜா பூங்கா மேலாளர் மற்றும் நகராட்சி உறுதியளித்துள்ளனர்,பூங்கா மேலாளர் நகராட்சிக்கும்KA.முஸ்தபா, நகரமன்ற உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் உதகை. நன்றி தெரிவித்தார்,
நீலகிரி மாவட்டம் உதகையில் ரோஜா பூங்காவில் கழிவு நீர் குழாய்கள் சீரமைப்பு
