உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தையை நிறுத்திய ரஷ்யா.!!

மாஸ்கோ: உக்​ரைன் – ரஷ்யா போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரு நாடு​களின் தலை​வர்​களை​யும் தனித்​தனியே சந்​தித்து பேசி​னார்.

ஆனால் பேச்​சு​வார்த்​தை​யில் தீர்வு எட்​டப்​பட​வில்​லை.

இதனிடையே ரஷ்​யா, உக்​ரைன் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்​தை​யும் துருக்கி நாட்​டின் தலைநகர் இஸ்​தான்​புல்​லில் 3 சுற்​றுகளாக நடை​பெற்​றது. ஆனால் எந்த முடி​வும் எட்​டப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், உக்​ரைனுட​னான அமை​திப் பேச்சு நிறுத்​தப்​பட்​டுள்​ளது என்று ரஷ்​யா​வின் கிரெம்​ளின் மாளிகை நேற்று அறி​வித்​துள்​ளது. இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்​தித் தொடர்​பாளர் டிமிட்ரி பெஸ்​கோவ் நேற்று கூறும்​போது, ‘உக்​ரைனுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வதற்​கு பல்​வேறு வழிகளில் நமது நாட்​டின் தலை​வர்​களுக்கு வாய்ப்​பு​கள் உள்​ளன. ஆனால் இப்​போதைக்​கு, பேச்​சு​வார்த்​தையை நிறுத்​து​வது குறித்து பேசுவது மிக​வும் துல்​லிய​மாக இருக்​கும்.

இளஞ்​சிவப்பு நிற கண்​ணாடியை அணிந்து அனைத்​தை​யும் நேர்​மறை​யாகப் பார்க்க முடி​யாது. அமை​திப் பேச்​சு​வார்த்தை பணி​கள் உடனடி​யாக பலன் தரும் என எதிர்​பார்க்க முடி​யாது” என்​றார்​.