கோவை மே 30கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுமுகை – நால்ரோடு சாலையில் அமைந்துள்ள நகை கடை அருகே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அச்சமயம் அவ்விடத்தில் ரோந்து சென்ற போலீசார் உடனே சென்று பார்த்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நகைக்கடை சுவற்றில் துளையிட்டுகொள்ளையடிக்க முயற்சி செய்தார், போலீசை கண்டதும்அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்..இது தொடர்பாக சிறுமுகைபோலீசார்வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேற்படி நகைக்கடையில் இருந்து நகையை திருட முயற்சித்தவர் சிறுமுகை பகுதி சேர்ந்த ரங்கன் மகன் மூர்த்தி (43) என்பதுதெரியவந்தது.இவரை போலீசார் கைது செய்தனர்.சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள்கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறுமுகை காவல் நிலைய போலீசாரின் சீர்மிகுந்த பணியை பாராட்டும் வகையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .கார்த்திகேயன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து அவர்களின் மெச்சத் தகுந்த பணியை பாராட்டி அவர்களுக்குபாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நகை கடைசுவரில் துளை போட்டு திருட முயன்ற கொள்ளையன்12 மணி நேரத்தில் கைது.எஸ் .பி .கார்த்திகேயன் பாராட்டு.
