ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பெயர் சூட்ட கோரிக்கை.

ராமநாதபுரம் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் மிகவும் பழமையடைந்து இடியும் நிலையில் இருந்ததையடுத்து அதனை மொத்தமாக இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ. 20 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் புதிய பேருந்து நிலையத்திற்கு சேதுபதி மன்னரும் சுதந்திர போராட்ட வீரருமான மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பெயரை சூட்ட தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வருக்கும் சம்பந்தப்பட்ட துறைக்கும் பரிந்துரைக்க வேண்டும் என தென் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி போல் உடை அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.