கோவை ஜூன் 9 கோவையை அடுத்த சூலூர்,முப்பிரிபாளையம் பக்கம் உள்ள வாகராயம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 66) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று கோவை அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தென்னம்பாளையம் அருகே சென்றபோதுதிடீரென்று நிலைதடுமாறி ரோட்டில் உள்ள தடுப்பு சுவர் மீது பைக் மோதியது இதில் பைக்குடன் கீழே விழுந்த ராமசாமி படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து அவரது மகன் ஆனந்தகுமார் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தடுப்பு சுவரில் பைக் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு.
