கோவை ஜூன் 4 கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் ” கூல் ஸ்பா “என்ற பெயரில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்றுஇரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.. அப்போதுஅங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதன் மானேஜரான திண்டுக்கல் மாவட்டம், அம்ம நாயக்கனூரை சேர்ந்த அறிவழகன் ( வயது 29 )கைது செய்யப்பட்டார். அங்குள்ள ஒரு அறையில் பதுங்கி இருந்த மசாஜ் அழகிகளான பாண்டிச்சேரி சந்தியா (வயது 23) விழுப்புரம் தேவி ( வயது 34 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டது.
பியூட்டி பார்லரில் விபச்சாரம். மசாஜ் அழகிகள் – மானேஜர் கைது.
