மசாஜ் சென்டரில் விபச்சாரம் :அழகிகள்உள்பட 10 பேர் கைது.

கோவை ஜூன் 10மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் சர்மா (வயது 36)இவர் கோவை அருகே உள்ள கீரணத்தம் பகுதியில் ” கோல்டன் ஆயுர்வேத மசாஜ் சென்டர்” என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.இங்கு அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக கோவில் பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக மசாஜ் அழகிகள் 8 பேர் மற்றும் கவுண்டம்பாளையம் ஸ்ரீராம் (வயது 30) சேலம் சங்ககிரி முருகானந்தம் (வயது 20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் இது நடத்தி வந்த ராஜேஷ் சர்மாதலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தேடி வருகிறார்கள் .இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது.