கோவை ராம்நகர் ,நேரு வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த குணசேகர் (வயது 51) உத்தரப்பிரதேசமாநிலத்தைச் சேர்ந்த ஷாலினி ( வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
லாட்ஜில் விபச்சாரம் : வெளிமாநில அழகி உட்பட 2 பேர் கைது..!
