கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று ( ஞாயிறு) முதல் கோவை மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும் 1 உதவி ஆய்வாளர் 3 காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்றங்களை தடுக்க தயங்காமல் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும், உட்கோட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெற கூடிய இடங்களில் இந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்..
கோவையில் குற்ற செயல்களை தடுக்க முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர சோதனை.!!
