ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு.

கோவை மே 14 கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் ஸ்ரீராம் ( வயது 16) கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார் . நேற்று தனது நண்பர்கள் 3 பேருடன் ஆனைமலை அருகே அம்பராம்பாளையம் ஆற்றுக்கு குளிக்க சென்றார் .அங்கு 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். ஒருவர் மட்டும் தண்ணீரில் இறங்காமல் கரையில் நின்று கொண்டிருந்தார். இதற்கிடையே ஆற்றில் இறங்கிய 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். அதை பார்த்து கரையில் நின்ற நண்பர் காப்பாற்றுமாறு கூச்சல் போட்டார் . அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ஸ்ரீ ராமின் நண்பர்கள் 2 பேரை மீட்டனர். இதற்கிடையே ஸ்ரீராம் தண்ணீரில் மூழ்கிபரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல்அறிந்ததும் பொள்ளாச்சிதீயணைப்பு படையினர் விரைந்து சென்றுஸ்ரீராமின் உடலை மீட்டனர்..அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.