கோவை ஜூன் 3கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுக பாளையம், பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு அஸ்விகா (வயது 19) உட்பட இரண்டு மகள்கள் உள்ளனர். அஸ்விகா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல பொள்ளாச்சி உடுமலை ரோடு, அண்ணாமலையார் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் பிரவீன் குமார் (வயது 23) தனியார்நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அஸ்விகாவுக்கும் பிரவீன் குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. இதனால் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறி தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர். இதற்கிடையில்அஸ்விகா கடந்த சில நாட்களாக பிரவீன் குமாருடன் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமார் நேற்று மதியம் அஸ்விகாவின் வீட்டிற்கு சென்றார்.. அப்போது வீட்டில் தனியாக இருந்தார் .இதையடுத்து பிரவீன்குமார் எனக்கு துரோகம் செய்து விட்டாயா? என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்விகாவின் முகம் கழுத்து உள்ளிட்ட 5 இடங்களில் கொடூரமாக குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அஸ்விகாவை சிகிச்சைக்காகபொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.அவரது உடலை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்..இது குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீன் குமாரை தேடி வந்தனர்.இதை அறிந்த அவர் பொள்ளாச்சி நகர மேற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதை யடுத்து தாலுகா போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அஸ்விகா வீட்டின் அருகில் பிரவீன் குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார்..அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் சிலிண்டர் எடுப்பதற்காக அஸ்விகாவின் வீட்டிற்கு பிரவீன் குமார் வந்தபோது இருவரும் தங்களது காதலை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதை அறிந்த பெற்றோர் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கிருந்து அண்ணாமலையார் நகருக்கு குடும்பத்துடன் பிரவீன் குமார் குடியேறினார் இந்த நிலையில் அஸ்விகா தனது மற்றொரு ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை “இன்ஸ்டாகிராமில் ” பதிவிட்டதாக தெரிகிறது இதை பார்த்த பிரவீன் குமார்இது குறித்து கேட்டபோது அவர் சரியான பதில் கூறவில்லை .மேலும் கடந்த சில நாட்களாக பேசுவகை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமார் , அஸ்விகா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சென்று கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தது தெரியவந்தது .இதை யடுத்து அவரை போலீசார்கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் .இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ஆண் நண்பருடன் புகைப்படம். கல்லூரி மாணவி குத்தி கொலை . காதலன் வெறிச் செயல் .
