தங்க பட்டறையில் தீப்பிடித்து உரிமையாளர் கருகி உயிரிழப்பு .

கோவை ஜூன் 11கோவை அருகே உள்ள கே. ராமச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 49) இவர் கோவை கெம்பட்டி காலனி, எல்.ஜி .தோட்டம் பகுதியில் சொந்தமாக தங்கப்பட்டறை நடத்தி வந்தார். பட்டறையில் தனது மனைவியுடன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்தது இதில் அவர் உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று இறந்து விட்டார் .இது குறித்து கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜமுனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.