கோவை ஜூன் 14கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ள கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 47 )நேற்று இவர் கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அவுசிங் யூனிட் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் கார்த்திகேயன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தனியார் பஸ் டிரைவரான பெரியநாயக்கன்பாளையம் ரங்கா நகரை சேர்ந்த ராஜேஷ் ( வயது 45) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தனியார் பஸ் ஸ்கூட்டர் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு.
