கோவை ரத்தினபுரி நாராயணசாமி வீதியை சேர்ந்தவர் ஞானராஜ் (வயது 38) இவரும் சங்கனூர் காமாட்சி நகரை சேர்ந்த சோம சேகர் ( வயது 37) என்பவரும் நண்பர்கள் .கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சோமசேகர், ஞான ராஜிடம் 80 ரூபாய் கடன் வாங்கி இருந்தார். அந்த பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. இதை அவரிடம் அடிக்கடி கேட்டு வந்தார் . இந்த நிலையில் நேற்று ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் ஞானராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சோமசேகர் அவரது நண்பர் பிரகாஷ் ராமமூர்த்தி ஆகியோர் சேர்ந்து ஞானராஜை தாக்கினார்களாம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது .இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து சோமசேகர் ( வயது 37) அவரது நண்பர் கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகர் சேர்ந்த பிரகாஷ் (வயது42) வேலாண்டிபாளையம் ராமமூர்த்தி ( வயது 46) ஆகியோர் கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..
ஓ! இது தான் அநியாத்தை கண்டா பொங்குறதா!! 9 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 80 ரூபாய் கடனை திருப்பி கேட்டதால் தகராறு-நண்பர் காயம் ..!!
