கோவை ஜூன் 6 கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோர் தெலுங்குபாளையம் பகுதியில் நேற்று இரவு சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம்21 கிலோ கஞ்சாவும் கஞ்சா விற்ற பணம் ரூ. 13 ஆயிரம் மற்றும் எடை மெஷின் , செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்களது பெயர் அமன்சிங் ( 20) மிதுன் கமன் ( 25 ) பிக்கி பிஸ்வகர்மா (26) என்பது தெரியவந்தது . 3 பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் .இவர்கள் வட மாநிலத்திலிருந்து ரயிலில் கஞ்சாவை கடத்தி வந்து கோவையில் பல்வேறு இடங்களில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்கள்மற்றும் கல்லூரி மாணவர்களை தேடி வீடு வீடாகச் சென்றுகஞ்சா வியாபாரம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீடு , வீடாகச் சென்று கஞ்சாவிற்பனை செய்யும் வட மாநில வாலிபர்கள் கைது.
