காரமடை அருகே ரூ. 211.57கோடி செலவில் புதிய சிறை.முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

கோவை மே 20கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர் .இந்த சிறைப்பகுதி செம்மொழி பூங்காவாக மாற்றப்பட்டது. இதற்கான முதல் கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது .அடுத்த கட்ட பணிகளை தொடங்குவதற்கு வசதியாக கோவை மத்திய சிறை காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து 211.57கோடி செலவில் புதிய மத்திய சிறை சாலை கட்டிடம் கட்டுவதற்கான அடிகல்லை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். புதிய சிறையில் இடம் பெற்றுள்ள வசதிகள் குறித்து கோவை சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- காரமுடை அருகே பிளிச்சி பஞ்சாயத்து உட்பட்ட ஒன்னிபாளையம் கிராமத்தில் இந்த சிறை அமைக்க பட உள்ளது .புதிய மத்திய சிறைச்சாலையின் கட்டுமான பணிகள் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்ட பணிகள் 2 மாதங்களுக்குள் தொடங்கும். 2,500 ஆண்கைதிகளை தங்க வைக்கும் வகையில் ஒரு சிறைச்சாலை கட்டப்பட உள்ளது. சிறை வளாகத்தில் ஒரு மருத்துவமனை, நிர்வாக அலுவலர் கட்டிடம், சுற்றுச்சுவர் சிறைக் கண்காணிப்பாளர் குடியிருப்புகள், கூடுதல் கண்காணிப்பாளர், ஜெயிலர் மற்றும் 111 பணியாளர்கள் குடியிருப்புகள் கட்டப்படும் .புதிய சிறைக்கு 95.70ஏக்கர் நிலத்தை மாநில அரசு ஒதுக்கி உள்ளது. 2-வது கட்டிடத்தில் 500 பெண்கள் தங்கக் கூடிய வகையில் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை கட்டப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.