நவராத்திரி விழா… நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து..!

ந்தியா முழுவதும் இன்று நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் ‘நவராத்திரி பண்டிகை அனைவர் வாழ்விலும் புதிய பலத்தையும், புதிய நம்பிக்கையையும் கொண்டு வரட்டும். பக்தி, தைரியம், கட்டுப்பாடு, உறுதிப்பாடு நிறைந்த புனிதமான பண்டிகை நவராத்திரி விழா’ எனப் பதிவிட்டுள்ளார்.