கோவை மே 30 கோவை விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி, புனே ,பெங்களூரு, ஹைதராபாத், சீரடி ஆகிய நகரங்களுக்கு 30 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று சிங்கப்பூர் ,சார்ஜா, அபிதாபி போன்ற வெளிநாட்டு முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் கோவை விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. எனவே அங்கு பயணிகளின் உடைமைகள் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை விமானநிலையத்தின் புறப்பாடு வாசல் முன்பு நேற்று முன்தினம் இரவில் கேட்பதற்கு ஒரு மர்ம பை கிடந்தது. இதை பார்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ். எப்) அந்தப் பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து மோப்பநாய் உதவியுடன் அந்த பையை சோதனை செய்தனர். வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மெட்டல் டிடைக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை.வெறும் துணிமணிகள் மட்டுமே இருந்தது தெரிய வந்தது. விமான நிலையத்துக்கு வந்த பயணிகள் யாரோ ஒருவர் அந்த பையை தவற விட்டு சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. அந்த பையை உரிமை கோரி யாரும் வரவில்லை. அந்தப் பைக்கு உரிமையாளர்கள் அடையாளம் கூறி பையைபெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கூறினார்கள். கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மாம பையால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்படுத்திய மர்ம பை.வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.
