நெகமம் அருகே, கேரளாவில் இருந்துகொண்டு வந்து மருத்துவக் கழிவுகள்கொட்டப்படவில்லை. காவல்துறை மறுப்பு.

கோவை ஜூன் 10கோவை மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம், பொள்ளாச்சி உட்கோட்டம், நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிணத்துக்கடவு தாலுகா, காணியம்பாளையம் கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பாறைக்குழியை நிரப்பும் நோக்கில், அவர்கோவில்பாளையத்தில் உள்ளகாளிதாஸ் என்பவரின் தொழிற்சாலையிலிருந்து இரும்பு துண்டுகள், ஸ்பாஞ்ச், தெர்மாகோல் போன்ற மருத்துவக் கழிவுகளுடன் தொடர்பில்லாத வணிகக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளார்.சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் பாறைக்குழியில் தேங்கிய நீரில் இக்கழிவுகள் மிதந்து துர்நாற்றம் வீசியதால், இது தொடர்பாக உள்ளூர் மக்களுக்கு தகவல்கள் பரவியுள்ளது.இதையடுத்து, கிணத்துக்கடவு தாசில்தார் மற்றும் நெகமம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர். அவர்களதுவிசாரணையில், அந்த இடத்தில் மருத்துவக் கழிவுகளோ அல்லது இறைச்சிக் கழிவுகளோ எதுவும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
.மேலும், துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கும் வகையில்உடனடியாக அந்தக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க நிலஉரிமையாளர் பாலகிருஷ்ணனுக்கு வருவாய்த்துறையினரால்உத்தரவிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்..இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.