மருதமலை முருகன் கோவில் : பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.84.48 லட்சம்…
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் நிரந்தர உண்டியலில் 80 லட்சத்து 2 ஆயிரத்து 563 ரூபாயும், திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 459 ரூபாயும், கோசாலை உண்டியலில் ரூபாய் 3,16,435 ரூபாயும் என மொத்தம் 84,48,487 ரூபாய் காணிக்கை இருந்தது.
மேலும் 43 கிராம் 100 மில்லி கிராம் தங்கமும், ஆறு கிலோ 811 கிராம் வெள்ளியும் 18 கிலோ 175 கிராம் பித்தலையும் இருந்தது.
மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் தக்கார் ஜெயக்குமார், துணை ஆணையர் செந்தில்குமார் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் செயல் அலுவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் உண்டியல் என்னும் பணியில் மேற்பார்வையிட்டனர் உண்டியல் என்னும் பணியில் பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.









