பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வரும் 28ம் தேதி மார்கழி திருவாதிரை திருவிழா..!

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மார்கழி திருவாதிரை திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு மார்கழி திருவிழா வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 10 மணிக்குள் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. முதல் 9 நாட்கள் காலையும், மாலையும், திருவெம்பாவை உற்சவமும், மாணிக்க வாசக சுவாமிகள் திருவீதி உலாவும் நடக்கிறது. மார்கழி திருவாதிரை உற்சவத்தின் 9-ம் நாள் இரவு, கிளி வாகன சேவை, அன்னூஞ்சல், சோமாஸ்கந்தர் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மார்கழி திருவாதிரை உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் நாள் வருகிற ஜனவரி 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும், காலை 7.30 மணிக்கு ஆருத்ரா தரிசன காட்சியும் நடக்கிறது.