கோவை ஜூன் 19 கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் புகுந்து அங்கிருந்த 5 சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 37) என்பவரை கைது செய்தனர். சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதிகள் குடியிருப்பில் சந்தன மரம் கடத்தியவர் கைது.
