கோவை மே 26 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுஅதிகாலையில் காந்திபுரம் 3-வதுவீதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் ,மங்கலம் ,கோட்டக்குடி பக்கம் உள்ள கள்ளிகுடி,மலரியை சேர்ந்த சுரேஷ் ( வயது 39 )கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 46 மது பாட்டில்களும் மது விற்ற பணம் ரூ 10 ஆயிரத்து 240 பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
டாஸ்மாக் கடையில் அதிகாலையில் மது விற்பனை செய்தவர் கைது.
