இருகூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம்.

கோவை ஜூன் 3 கோவை அருகே உள்ள இருகூருக்கும் -சூலூருககும் இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.. இவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா ?அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது இறந்தாரா ?என்பது தெரியவில்லை .இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.