கோவை ஜூன் 22கோவைவாலாங்குளத்தில் நேற்று ஒருஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 60 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அனுப்பர் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சித்ரா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
வாலாங்குளத்தில் ஆண் பிணம்.
