கோவை ஜூன் 10 கோவை உக்கடம் பெரிய குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 45 வயது இருக்கும் அவர்யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி சரவணன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
உக்கடம் குளத்தில் ஆண் சடலம்.
