உக்கடம் குளத்தில் ஆண் சடலம்.

கோவை ஜூன் 10 கோவை உக்கடம் பெரிய குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 45 வயது இருக்கும் அவர்யார் ? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி சரவணன் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுபிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.