திருவாடானை அருகே வேப்பமரத்தில் மோதிய லாரி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொச்சி தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் பகுதியில் கேரளாவில் மீன் லோடு இறக்கிவிட்டு நாகப்பட்டினத்திற்கு திரும்பி வரும் போது ஈச்சர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இழந்து வேப்ப மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது . இதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45) ஓட்டுநர் சிக்கி கொண்டார். அதற்குப் பிறகு திருவாடானை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் முருகானந்தம் (போக்குவரத்து) பொறுப்பு தலைமையிலான வீரர்கள் நீண்ட நேரம் போராடி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி டிரைவரை பத்திரமாக மீட்டனர் அவருக்கு காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.