அதிரடி மன்னன் ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கின்றனர். இவரை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
ரஷ் ஹவர்ஸ், போலீஸ் ஸ்டோரி, கராத்தே கிட் போன்ற இவருடைய பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. தமிழ் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இவருடைய படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு இவருக்கு உலக அளவில் ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளன.72 வயதாகும் ஜாக்கி சான், இன்னும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் கராத்தே கிட் பார்ட் 2 படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஜாக்கிசான் தனது சொத்து மதிப்பில் இருந்து ரூ.3400 கோடியை ஏழை குழந்தைகளின் கல்வி செலவுக்காகவும் இயற்கை பேரிடர் மீட்பு பணிகளுக்காகவும் நன்கொடை வழங்கியிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. ‘ஜாக்கி சான் சானிடரி ஃபவுண்டேஷன்’ மூலம் 3400 கோடி ரூபாய் (அதாவது சுமார் 480,000 அமெரிக்க டாலர்கள்) மதிப்பில் உணவு, உடைகள் மற்றும் மருந்துகளை சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள ஏழை கிராம மக்களுக்கு ஜாக்கி சான் வழங்கியுள்ளார்.இதுகுறித்து பேசிய ஜாக்கி சான், “இந்த இடத்தின் ஏழ்மையை ஊடகங்கள் வெளியிட்டதற்கு நன்றி. நான் ஊடகங்களுக்காக நன்றி கூறுகிறேன்.
அவர்கள் இதுபோன்ற ஏழ்மையான இடங்களை மேலும் வெளிப்படுத்த வேண்டும். உலகில் ஏழை மக்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு உதவுவது என் கடமை. நான் நம் சமூகத்திற்கு உதவுவதில் பெருமை அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.